ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பதில் கேட்டேன், படி!
























பூபாளம் கேட்கிறது முருகா
பொழுதெப்போ விடியல் வரும் முருகா?
ஆகாரம் போது மென்று முருகா
அனைவருமே சொல்லும் நிலைக்கருள்தா!

வீணான வார்த்தைகள்தான் அதிகம்
மீட்டெடுக்க யார்படிப்பார் பதிகம்?!
போனாயோ நல்லூரைவிட்டு - நீயும்
பொறுப்பின்றிப் போனாயோ கெட்டு!!???

பாவிகள்தான் நாமெல்லாம் உண்மை
பார்த்திருத்தோம் வாசலிலே உன்னை
தேவியுடன் உன் பொழுது என்றால் - நீ
தேவையில்லை எங்களுக்கு கந்தா!

கருத்துகள் இல்லை: