பல்லவி
கொக்குவிலை விரும்பி வந்தான் குமரன்
குளிர் சோலை மஞ்ச வனப்பதி முருகன்
அனுபல்லவி
தந்தைக்கே பொருள் சொன்ன தலைவன் - அழகு
தமிழுக்கே உயிர் தந்த முருகன்
சரணங்கள்
அழகான நந்தவனம் உண்டு அருகில்
அருள் பாயும் திருக் கேணி உண்டு
உலகாள உயர் கோபுரம் உண்டு -உன்
உயிரான தமிழ் மகளும் உறவாக உண்டு
கடம்ப மர நிழல் விரும்பும் முருகா -எம்
கதிவினையை தீர்த்துவிட அருள் தா
திடம் பட நம் நெஞ்சுகளில் வருவாய்
திரு முருகா அருளிட வா குரு வாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக