புதன், 12 மார்ச், 2008

நமை ஆளும் நல்லுரான்!

பல்லவி
நல்லுரின் புகழ் தென்றல் பாடும் - அந்த
நாதத்தில் மன ஊக்கம் கூடும் -( எங்கள்)

அனுபல்லவி
கல் ஊறும் நீராகும் மனது - அன்பில்
கசிகின்ற போது என் கனவிலும் உன் நினைவு !

சரணம்

தேர் அடியின் மகிமை அது பெரிது -வான
தேவர்க்கும் கிட்டாத சிறப்பு இது அரிது
பார் அடியில் மணலும் அது வெண்மை - இனி
பற்றி விடும் எம் இதயம் உன்னை !
.
கேணி அதன் காற்றில் சுகம் நூறு - நாம்
கேட்பது எம் சிந்தையிலே அறிவு அதன் சாறு -தண்ட
பாணி நீ கண்டது மெய்ஞானம் - அதில்
பாதி யாகிலும் நீ தர வேணும் !
.
நேரத்தில் வழு ஏதும் இல்லை - பூசை
நியமத்தில் தவறேதும் இழையாத பிள்ளை
கூறுந்தன் மொழி என்ன எமக்கு - உன்
குமிண் சிரிப்பு வழி காட்டும் நமக்கு !

கருத்துகள் இல்லை: