வெள்ளி, 7 மார்ச், 2008

கதிர்காமம்

பல்லவி
மயில் அகவ விடிகின்ற கதிர்காமம் - கதிர
மலையினிலே வேல் கண்டால் மனம் ஆறும்

அனுபல்லவி
துயில்கின்ற பொழுதெல்லாம் உன் காவலே- விடியல்
துவங்கிடவே கூவுவது உன் சேவலே

சரணம்
கதிர்காம முருகா நீ முகம் காட்டிடு- எங்கள்
தலை ஏறி பழவினைகள் தனை ஒட்டிடு
குற வள்ளி தனை சேரும் அழகானவன் - தேவ
குளம் வாழ படை கொண்டு அமர்ந்தான் இவன்

அடியாரோடுஅடியாராய்வாழ்கின்றவன்- சூரன்
அகம் பாவம் தனை போக்க வேல் கொண்டவன்
வடிவேலன் அருள் ஆட்சி கதிர்காமத்தில் - அன்பு
வரவேணும் என் மீதும் அருள் கூருவை

கருத்துகள் இல்லை: