வெள்ளி, 7 மார்ச், 2008

நல்லூரன்

பல்லவி
அழகென்ற பொருள் கொண்ட அருளாளனே-நல்லை
அமர்ந்தெம்மை ஆள்கின்ற மணவாளனே
.
அனுபல்லவி
பொழுதெல்லாம் உனை பாடும் வரம் வேண்டுமே - உந்தன்
புகழ் பாடி சுகம் காணும் திறன் வேண்டுவேன்
.
சரணம்
மணி வாயில் திறந்துந்தன் உரு காட்டினாய் - என்
மன வாயில் புகுந்தின்று அருள் கூட்டினாய்
அணியாகும் திருக்கேணி அமர்கின்றவன் - தமிழின்
அழகாலே குளிர் பழனி ஆண்டவன் இவன்
.
நல்லுரின் மணி கேட்டு யாழ் நகரம் எழும்பும்
நல்லதெனபூவிருந்து வண்டுகளும் அலம்பும்
எல்லோரும் வாழ்வதற்கு எழில் முருகா அருள் தா
என் கவிதை வரிகளிலே நீ உறை வாய் பொருளாய்

கருத்துகள் இல்லை: